எனக்கு சில உண்மைகள் தெரியும்,
அவற்றைச் சொல்வதால் யாருக்குமே பயனில்லை,
சிலர் மனவருத்தமும் அடையக்கூடும் என்றால்,
அந்த உண்மைகளை யாருக்கும் சொல்லமாட்டேன்.
எனக்கு சில உண்மைகள் தெரியும்,
அவற்றைச் சொல்வதனால் யாருக்குமே பயனில்லை,
ஆனால் சிலருக்கு அந்த உண்மைகள் இனிப்பாக இருக்கும்
என்றால்,அந்த உண்மைகளை சொல்லமாட்டேன்.
எனக்கு சில உண்மைகள் தெரியும்,
அவற்றைச் சொல்வதனால் சிலர் பயனடைவார்கள்,
வேறு சிலர் மனவருத்தம் அடைவார்கள் என்றால்,
அவ்வுண்மைகளை சொல்ல சரியான நேரம்
வரும் வரை காத்திருப்பேன்.
எனக்கு சில உண்மைகள் தெரியும்,
அவற்றை சொல்வதனால் சிலர் பயனடைவார்கள்,
சிலருக்கு அது இனிப்பாக இருக்கும் என்றால்
நான் அதைச் சொல்வேன்.
No comments:
Post a Comment